search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி தாக்குதல்"

    • முன் விரோதம் காரணமாக விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 28).கூலி தொழிலாளி. இவருக்கும் நடராஜபுரத்தை சேர்ந்த சரவணன் (50). ஆட்டோ டிரைவர். என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது.

    இந்த நிலையில் சரவணனுக்கும், செந்தில் குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒரு தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.

    ஆத்திரமடைந்த சரவணன், செந்தில்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் சரவணன் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இது சம்பந்தமாக ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணனை நேற்று இரவு கைது செய்தனர்.

    • கனிராஜ் மற்றும் அழகுமுருகேசன் ஆகியோர் சூரங்குடி போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
    • விசாரணையின்போது கனிராஜ் மற்றும் எஸ்.ஐ. சுந்தரம் ஆகிய இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி பகுதியில் வசித்து வருபவர் கனிராஜ். கூலித்தொழிலாளி.

    இவரை, இடப்பிரச்சினை சம்பந்தமாக சூரங்குடி சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் தொலைபேசியில் அழைத்து நேரில் விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து கனிராஜ் மற்றும் அழகுமுருகேசன் ஆகியோர் சூரங்குடி போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

    விசாரணையின்போது கனிராஜ் மற்றும் எஸ்.ஐ. சுந்தரம் ஆகிய இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுந்தரம், கனிராஜை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட கனிராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக சூரங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆத்திரம் அடைந்த கோகுல்நாத் அருகே கிடந்த கல்லால் பன்னீர்செல்வத்தின் முகத்தில் தாக்கினார்.
    • கல்லால் தாக்கியதில் பன்னீர்செல்வம் படுகாயம் அடைந்தார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியை சேர்ந்தவர்கள் பன்னீர்செல்வம்(59), தொழிலாளி. கோகுல்நாத்(22). இவர்கள் இருவரும் சேர்ந்து மதுகுடித்தபோது தகராறு ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த கோகுல்நாத் அருகே கிடந்த கல்லால் பன்னீர்செல்வத்தின் முகத்தில் தாக்கினார். இதில் பன்னீர்செல்வம் படுகாயம் அடைந்தார்.

    இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுல்நாத்தை கைது செய்தனர்.

    • பணத்தகராறில் மகமுதாவின் சகோதரர்களான அக்பர் பாஷா, முகமது ரபி, பர்கத் ஆகிய 3 பேரும் சேர்ந்து அசோன் செரீப்பை தாக்கினர்.
    • திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அக்பர் பாஷா உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் விக்னேஸ்வரா நகரை சேர்ந்தவர் அசோன் செரீப். சமையல் வேலை செய்து வருகிறார். இவரிடம் திருவள்ளூர் முகமது அலி தெருவை சேர்ந்த மகமுதா என்பவர் ரூ.60 ஆயிரம் கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது. ஆனால் அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இது தொடர்பான தகராறில் மகமுதாவின் சகோதரர்களான அக்பர் பாஷா, முகமது ரபி, பர்கத் ஆகிய 3 பேரும் சேர்ந்து அசோன் செரீப்பை தாக்கினர்.

    இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அக்பர் பாஷா உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • தகாத வார்த்தைகள் பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
    • விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்துக்காக பணம் கேட்டார்.

    கோவை:

    கோவை கெம்பட்டி காலனி அருகே உள்ள அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் அஜித் என்ற ரவிக்குமார் (வயது 26). தங்க நகை தொழிலாளி. இவரிடம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்துக்காக அதே பகுதியை சேர்ந்த மணி (19) என்பவர் பணம் கேட்டார். ஆனால் ரவிக்குமார் பணம் கொடுக்க மறுத்து விட்டார். சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரவிக்குமார் மணியை தாக்கினார். இது குறித்து அவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (20), 17 வயது சிறுவன் ஆகியோரிடம் தெரிவித்தார். பின்னர் இவர்கள் 3 பேரும் சென்று ரவிக்குமாரை தகாத வார்த்தைகள் பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். 

    • விற்பனையாளர் மதுபாட்டிலுக்கு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலித்தார்.
    • வாலிபர் தட்டிக்கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த காக்களூர் பைபாஸ் சாலையில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இங்கு நேற்று மாலை திருவள்ளூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் மதுபாட்டில் வாங்க சென்றார்.

    அப்போது அங்கு இருந்த விற்பனையாளர் மதுபாட்டிலுக்கு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலித்தார். இதனை வாலிபர் தட்டிக்கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனை அந்த வாலிபர் தனது செல்போனில் படம் பிடித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மதுக்கடை விற்பனையாளர், திடீரென அந்த வாலிபரை சரமாரியாக தாக்கினார். இருவரும் மதுக்கடை முன்பு கட்டிப்புரண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனை கண்டு மதுபாட்டில் வாங்க வந்த குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த தாக்குதலில் வாலிபருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    இதுகுறித்து அவர் திருவள்ளூர் தாலுக்கா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×